பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/741

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தாவரங்கள்

725

மஞ்சரி : 4-6 செ.மீ. நீளமானது. 3-7 இணர்க் காம்புகள், அடியிலிருந்து வட்டமாக வளர்ந்து, நீண்டு இருக்கும். மலரில் பசிய, நீண்ட 3 செதில்கள் (பிராக்ட்) உள்ளன. மலர்க் காம்பில் 2-8 ‘ஸ்பைக்லெட்’ உண்டாகும்.
ஸ்பைக்லெட் 
: குறுகி, நீண்ட 5-25 X 1-2 மி. மீட்டர் அளவானது. ஒவ்வொரு காம்பிலும் 10-20 மலர்கள் நேராக மலர்க் காம்பின்றி இணைந்துள்ளன.
மலர் : மலரில் ‘ராக்கில்லா’ நிலைத்திருக்கும். ‘விங்’ 1-2 மி. மீ, வெளுப்பானது. ‘குளும்’ விளிம்பொட்டியது. 3-4 மி.மீ. நீளமானது. மெல்லியது. சூல்களை அடக்கியது. நுனி கூரிய முள் போன்றது. பக்கத்தில் 5 நரம்புகளை உடையது. ‘கீல்’ பசுமையானது. 3 நரம்புடையது. சூல்முடி நீண்டு 3 பிரிவானது.
மகரந்த வட்டம் : 3 தாதிழைகளை உடையது. இழைகள் மெல்லியவை. 4 மி. மீ. நீளமானவை. தாதுப் பைகள் 3 மி.மீ. நீளமானவை. மேல் நுனி சிவப்பாக இருக்கும்.
விதை : ‘நட்’ எனப்படும் முப்பட்டையானது. சற்று நீண்டது. 1 மி. மீ. நீளம்.

சைபிரேசி என்ற இத்தாவரக் குடும்பத்தில் உள்ள சைபீரஸ் என்னும் இப்பேரினத்தில் இந்திய நாட்டிலுள்ள 61 சிற்றினங்களை ஹூக்கர் விவரித்துள்ளார். தமிழ் நாட்டில் 36 சிற்றினங்கள் வளர்வதாகக் காம்பிள் என்பவர் கூறுவர்.

இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 108 என தனாக்கா என் (1937, 1948) ஜின்னோ (1965 பி), செய்சர். விட்டாக்கர் (1948) முதலியோர் கணித்துள்ளனர். இக்கோரை பாய் முடைவதற்குப் பயன்படுகிறது.