பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

சங்க இலக்கியத்

தாமரை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுப்பு : தாலமிபுளோரே (Thalamiflorae)
தாவரக் குடும்பம் : நிம்பயேசி (Nymphaeaceae)
தாவரப் பேரினப் பெயர் : நிலம்பியம் (Nelumbium)
தாவரச் சிற்றினப் பெயர் : ஸ்பிசியோசம் (Speciosum, )
சங்க இலக்கியப் பெயர் : தாமரை, கமலம்
உலக வழக்குப் பெயர் : தாமரை, பதுமம், கமலம்
ஆங்கிலப் பெயர் : லோடஸ் (Lotus)
தாவர இயல்பு : நன்னீர்க் கொடி; குளம், குட்டை, பொய்கை முதலிய நன்னீர் நிலைகளில் வளரும். இதில் நிறத்தால் வேறுபட்ட செந்தாமரையும் வெண் தாமரையும் உண்டு.
தண்டு : சேற்றில் அழுந்திய அடிமட்டத் தண்டு கிழங்கு போன்றது. இதன் கணுவிலிருந்து இலைகளும், மலர்களும் உண்டாகும்.
இலை : இலை வட்டவடிவமானது (2-3 அடி) ஒரு வகையான கொழுப்புப் பொருள் இலைப் பரப்பில் உள்ளது. அதனால் நீர்த்துளி அதில் தங்குவதில்லை; ஒட்டுவதுமில்லை.
இலைக் காம்பு : 3-6 அடி நீளமானது. சிறுமுட்கள் அடர்ந்தது: இலையின் அடியில் நடுவில் இணைந்திருக்கும்.
மலர் : அகவிதழ்கள் செந்நிறமாக இருப்பின் செந்தாமரை எனவும், அவை வெண்ணிறமாக இருப்பின் வெண்டாமரை எனவும் கூறப்படும். நீண்ட முள் நிறைந்த மலர்க் காம்புகளில் முகை உண்டாகும். மலர் அகன்றது. வட்ட வடிவாகத் தோன்றும். பூத்த மலர் மிக அழகானது. நறுமணம் உள்ளது.