பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/770

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

754

சங்க இலக்கியத்

“. . . . . . . . . . . .பித்திகத்து
 அவ்விதழ் அவிழ்பதம் கமழப்பொழு தறிந்து
 இரும்புசெய் விளக்கின் ஈர்ந்திரிக் கொளீஇ
 நெல்லும் மலரும் தூஉய்க்கை தொழுது”
-நெடுநல். 40-43


செந்நெல் அடித்த நெல்லின் கதிர்கள் உள்ள தாளைக் கொண்டு கூரை வேய்வர்.

“அலங்கு செந்நெற் கதிர் வேய்ந்த
 ஆய் கரும்பின் கொடிக் கூரை”
-புறநா. 22 : 14-15


இத்துணைச் சிறப்பிற்றாகிய நெல்லை, அரிசியாக்கி உணவாகக் கொள்வர். சோறு ஆக்கிய கொழுங்கஞ்சி யாறு போலப் பரந்து ஓடும் இயல்பினைப் பட்டினப்பாலை கூறக் காணலாம். பண்டைத் தமிழ் நாட்டில் தொன்று தொட்டு விளைவிக்கப்பட்டது நெல். நெல்லுக்குத் தாவரப் பேரினப் பெயர் ஓரைசா (oryza) என்பதாம். இச்சொல் இலத்தீன் மொழிச்சொல் என்றும், இச்சொல்லே ஆங்கிலத்தில் ரைஸ் (rice) என்றாகி, நெல்லின் அரிசியைக் குறித்தது என்றும் இலத்தீன் -ஆங்கில அகராதியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நெல்—ஐவனம்—தோரை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் ஒரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : குளுமேசி (Glumaceae)
தாவரக் குடும்பம் : கிராமினே (Gramineae)
தாவரப் பேரினப் பெயர் : ஒரைசா (Oryza)
தாவரச் சிற்றினப் பெயர் : சட்டைவா (sativa)
சங்க இலக்கியப் பெயர் : நெல்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர் : ஐவனம், வெண்ணெல், செந்நெல், தோரை
தாவர இயல்பு : 4 அடி வரை உயரமாக வளரும் ஓராண்டுச் செடி. 5-6 மாதங்களில்