பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாவரங்கள்

67

காப்பாரிடேசி என்னும் இத்தாவரக் குடும்பத்தில் 46 பேரினங்களும், 700 சிற்றினங்களும் உள்ளன. பெரும்பாலும் இவை உலகின் இரு வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. இவற்றுள், கப்பாரிஸ் (350), கிளியோம் (200), எனும் 2 மிகப் பெரிய பேரினங்களும், கிரடேவா (20) எனும் பேரினமும், உலக வெப்ப நாடுகளிலும், ஏனையவற்றுள் 15 பேரினங்கள் ஆப்பிரிக்கா நாட்டிலும், 3 பேரினங்கள் புது உலகிலும், 7 பேரினங்கள் யுரேசியாவிலும் காணப்படுகின்றன.

கப்பாரிடேசீ, குருசிபெரே என்னும் இரு தாவரக் குடும்பங்களும் ஒன்றோடொன்று மிகவும் நெருங்கியவை. இவை பழைய பொது மூலத் தாவரத் தொகுப்பிலிருந்து தோன்றியிருக்கலாம் என்றும், குருசிபெரே குடும்பம் மிகப் பண்டைய கப்பாரிடேசீ குடும்பத் தாவரத் தொகுப்பிலிருந்து தோன்றியிருக்கக் கூடும் என்றும் தாவர மரபுவழி நிபுணர்கள் மதிப்பிடுகிறார்கள். தாவரக் குடும்பங்களிலும் இரண்டறைச் சூலகமும், விளிம்பு ஒட்டு முறையில் உள்ள சூல்களும் அச்சு ஒட்டு முறைச் சூல்கள் இணைந்த நான்கறைச் சூலகத் தாவரங்களின்றும் தோன்றி இருக்கக் கூடுமென்பர்.

பயன் :

இது ‘நல்வேளை’ எனப்படும். இதன் பூ, கொழுந்துகளில் சாறு எடுத்துத் தாய்ப்பாலுடன் கொடுக்க, குழந்தைகளின் மார்புச் சளி நீங்குமென்பர். பொதுவாக, வேளை ஒரு நல்ல மருந்துச் செடி.

இதனுடைய இலைகளைக் கொய்து தயிரில் பிசைந்து, சுட வைத்துப் ‘புளிக்கூழ்’ ‘புளி மிதவை’ என்னும் உணவு ஆக்குவர் என்று புறநானூற்றுப் பாடல் ஒன்று கூறுகின்றது. இன்னுமொரு பாடல், இதனுடைய இலைகளை வேக வைத்து உப்பின்றியும் ஏழை மக்கள் உணவாகக் கொள்வர் என்று உரைக்கும்.

வேளை தாவர அறிவியல்

தாவரவியல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
பகுதி : பெரைய்டேலீஸ்
தாவரக் குடும்பம் : கப்பாரிடேசீ