பக்கம்:சங்க இலக்கியத் தாவரங்கள்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

முகை : பொன்னிறமானது. தென்னங் குரும்பை போன்றது. அடி பரந்து முனை குவிந்து மலர் விரிந்து பளப்பளபாகத் தோன்றும்.
புல்லி வட்டம் : 5 புறவிதழ்கள் மெல்லிய பட்டு போன்றவை; எளிதில் உதிர்ந்து விடும்.
அல்லி வட்டம் : 5 அகன்று தடித்த அகவிதழ்கள் முகையில் முறுக்கமைப்பில் உள்ளன. முகை விரிந்து மலருங்கால் பொன்னிறமான பளபளப்பான இதழ்கள் விரிந்து தோன்றும்.
மகரந்த வட்டம் : பல மகரந்தத் தாள்கள் வட்டத்தட்டில் உண்டாகும் தாதுப்பையின் மேலே குறுகிய வெடிப்பு தோன்றும். அதன் வழியாகப் பொன்னிறத் தாது உதிரும்:
சூலக வட்டம் : 3-5 செல் உடையது சூலகம். சூலறைகள் பல. சூல்கள் 3-5 விளிம்பு ஒட்டு முறையில் இருக்கும். சூல்தண்டு மெல்லியது.
கனி : 3-5 வால்வுகளை உடையது:

விதை—பல விதைகள் உண்டாகும். விதையுறையில் நீண்ட பஞ்சு இழைகள் காணப்படும்; முளைக்கரு வளைந்திருக்கும்:

இதன் மரம் பயனற்றது. பஞ்சிழைகளைப் பயன் கொள்வதில்லை. இலைகள் தோன்றுமுன்னர் மரம் முகை அரும்பத் தொடங்கும் இயல்பிற்று. இம்மரம் மலைப்பாங்கான வறண்ட மேற்குக் கடற்கரைக் காடுகளில் வளரும். மலர்ந்த இம்மரம் கண்கவரும் வனப்புள்ளது.