சில பார்வைகள் 115
தேமரு தொடையன் மார்பன் திருமணக்
கோலங் கானக் காமரு மனத் தான் போலக் கதிரவன்
உதயஞ் செய்தான்.
-பெரிய: தடுத்தாட்: 13.
கைகேயி தான் முன்னாளிற் பெற்ற வரங்களில் இரண்டிலொன்றால் சீதைகேள்வன் இராமனைக் காட்டிற்கு அனுப்புவதற்குத் தசரதனிடம் ஒப்புதல் பெற்றாள். இச் செய்தியால் அயோத்திவாழ் மக்கள் அவதியுற்றனர்; அஃறிணையுயிர்கள் வாட்டமுற்றன: இச் செயலால் கோப முற்ற கதிரவன் கைகேயியின்மாட்டுப் பெருஞ்சினங் கொண்டு கீழ்த்திசையில் சிவந்து எழுந்தான் என்கிறார் கம்பர்.
பாப முற்றிய பேதை செய்த பகைத்திறத்தினில்
வெய்யவன்
கோப முற்றி மிகச் சிவந்தனன் ஒத்தனன் குரை
குன்றிலே
-கம்ப; அயோ கைகேயி சூழ்வினைப்படலம்: 61.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் மகாகவி பாரதியார்,
புல்லை நகையுறுத்திப் பூவை வியப்பாக்கி மண்ணைத் தெளிவாக்கி நீரில் மலர்ச்சிதந்து விந்தை செய்யும் சோதி
யினைக் காலைக் கதிர ழகின் கற்பனைகள் பாடுகின்றேன்” என்று கூறிப் பின்வருமாறு கதிரவனைப் புனைந்துரைத் துள்ளார்:
தங்கம் உருக்கித் தழல்குறைத்துத் தேனாக்கி எங்கும் பரப்பியதோர் இங்கிதமோ? வான்வெளியைச் சோதிகவர்ந்து சுடர்மயமாய் விந்தையினை ஒதிப்புகழ்வார் உவமையொன்று காண்டாரோ?