பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 சங்க இலக்கியம்

தமிழ் முன்னோர் இதனைக் குமரிக்காண்டம் என வழங்கினர்.

ஒரு காலத்துக் கடல் பொங்கியெழுந்து அதன் பல பகுதிகளைத் தன்னகப்படுத்திக்கொண்டது. முன் ஒன்றா யிருந்த ஆஸ்திரேலியா, சீனா ஆப்பிரிக்கா இந்தியா முதலிய நாடுகள் அக்காலத்திலேயே பிளவுபட்டிருத்தல் வேண்டும். “ஸ்காட் எலியட் கூறும் ஐந்தாவது கடல்கோட் காலமே அவ்வெள்ளப் பெருக்கின் காலமெனக் கருதப்படுகின்றது.’

குமரிக்கண்டம் அழிவெய்தியபின் தென்னிந்தியா வின் தொடர்ச்சியாக இலங்கை, சுமத்திரா, ஜாவா முதலிய நாடுகளை உள்ளடக்கிய ஒரு பெருந்தீவு விளங்கிற்று. அதன்கண் நாவல் மரங்கள் செழித்தோங்கி வளர்ந்த மையால் அது நாவலந்தீவு என்னும் பெயரைப் பெறுவதா யிற்று. ‘குமரித் தீவு”, “குமரி காடு’ என்றும் அது வழங்கப் பட்டது. குமரி நாட்டின் வடக்கு எல்லை விந்திய மலையாக இருந்தது. இமயமலையும் சிந்து கங்கைச் சமவெளிகளும் அக்காலத்தில் தோன்றவில்லை. ஆகவே குமரி நாடு அல்லது பழைய தமிழகம் ஆசியாக் கண்டத்தின் பகுதியாக இருக்கவில்லை. தெற்கே கிடந்த நிலப்பரப்புக்களிற் பெரும் பகுதி கடலுள் மறைந்தது. அப்போது இமயமலையும் சிந்துகங்கைச் சமவெளிகளும் கடலாழத்தினின்றும் மேற் கிளம்பின. இமயமலைச் சாரல்களில் நீர்வாழ் உயிரினங் களின் எலும்புக்கூடுகளும் காணப்படுகின்றன. அதனால் இமயமலை ஒரு காலத்தில் நீரில் மூழ்கிக் கிடந்ததெனத் துணியப்படுகின்றது. இமயமலையும் அதனை ச் சார்ந்த

-

--- - - - --

1. “ There is Geological evidence to prove that in very early time South India formed part of a huge Continent wo ich extended from Burma and South China in the east, South Africa crl the west, Vindya hills cri the North and Australia on the South”.

—Ric Vedic India, p. 91.