பக்கம்:சங்க இலக்கியம்-சில பார்வைகள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில பார்வைகள் 158

2. பலாப்பழம் அளவாகச் சிறுசிறு பொதிகளாகக் கட்டப்பட்ட மிளகு மூட்டைகளைக் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு வணிகச்சாத்து சென்றதையும், இடையில் சுங்கச் சாவடிகளில் சுங்கஞ் செலுத்திய தையும்,கடியலூர் உருத்திரங்கண்ணனார் கூறுகின்றார்.

தடவுகிலைப் பலவின் முழுமுதற்கொண்ட சிறுசுளைப் பெரும்பழங் கடுப்ப மிரியல் புணர்ப்பொறை தாங்கிய வடுவாழ் நோன்புறத்து அணர்ச்செவிக் கழுதைச் சாத்தொடு வழங்கும் வில்லுடை வைப்பின் வியன்காட் டியவு

-பெரும்பாண். 77.82

3. கிழக்குப்பக்கத்து நெய்தல் நிலத்தைச் சார்ந்த கடற்கரைப் பக்கங்களில் உண்டான உப்பை மூட்டை களாகக் கட்டிக் கழுதைகளின் மேல் ஏற்றிக்கொண்டு மேற்கேயுள்ள ஊர்களுக்கு வணிகர் சென்றனர்.

அணங்குடை முந்நீர் பரந்த செருவின் உணங்குதிறம் பெயர்த்த வெண்கல் அமிழ்தம் குடபுல மருங்கின் உய்ம்மார் புள்ளோர்த்துப் படையமைத் தெழுந்த பெருஞ்செய்யாடவர் கிரை பரப் பொறைய கரைப்புறக் கழுதைக் குறைக் குளம் புதைத்த கற்பிறழ இயவு

-அகம். 207: 1-6 சேந்தம்பூதனார்

4. வணிகச் சாத்தரை வென்று கொள்ளைக்

காரர் வழிபறித்ததைக் க டி ய லூ ர் உருத்திரங் கண்ணனார் கூறுகின்றார். .

சாத்தெறிந்து அகர்கூட்டுண்ணும் அணங்குடைப் பகழிக் கொடுவில் ஆடவர் -அகம். 7.9

சங்க-10