இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
214 சங்க இலக்கியம்
- = H = H = H H = ... ஆகுளிகடுப்பு
ளுை யிரட்டு கெடுகலை யடுக்கத்து குடிஞை -மலைபடு. 140:141
என்பன காட்டும்.
எல்லரி
மலைபடுகடாம் குறிக்கும் சிறிய பறை. விளக்கம் பொருந்திய தாளத்தைக் கொண்டு ஒலிக்கும் வலிய வாயை யுடையது. எல்லரி. இதனை .
கடிகவர் பொலிக்கும் வல்யெல்லரி
-மலைபடு. 10 என மலைபடுகடாம் குறிக்கின்றது.
தடாரி
தடாரி என்பது கினைப்பறை,
அரிக்குரற் தடாரி
-புறம். 390: 8 எனப் புறநானூற்றாலும்,
அரிக்குரற் றடாரியின் யாமை மிளிரி
-புறம். 249: 4
மதியத் தன்னவென் னரிக்குரற் றடாரி
-புறம். 398: 12
என்னும் புறநானூற்றடிகளாலும்,
பைத் த பாம்பின் றுத்தி யேய்ப்பக் கைக்கச டிருந்த வென் கண்ணகன் றடாரி
-பொருந. 69-70 என்னும் பொருநராற்றுப்படை அடிகளாலும் சங்ககாலத்தில் தடாரிப்பிறை இருந்தமை தெளிவாகிறது.