இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
108
மனைவியர் இளைய மனிதர்க்கு இளம்வயதில் தலைவியராகவும், நடுத்தர வயதில் துணைவர்களாகவும், முதிய வயதில் செவிலியராகவும் திகழ்கின்றனர்.
- பிரான்சிஸ் பேகன்
கடவுள் எல்லாவிடங்களிலும் நீக்கமற நிறைந்து ஒளிர முடியாது; எனவே தனக்கு மாற்றாகத் தாயரைப் படைத்தான். - ஓர் யூதப் பழமொழி
குழந்தைகளின் உதடுகளிலும் உள்ளத்திலும் தாய் மார்கள் கடவுளாகத் திகழ்கிறார்கள். - தாக்கரே
குழந்தையின் எதிர்காலம் தாய்மார்களின் கைவினை யாக அமைகின்றது. - நெப்போலியன்
தாய்மார்கள் எவ்வாறு உருவாக்குகிறார்களோ அவ் வாறே மனிதர்கள் அமைகிறார்கள்.
- எமர்சன்
மனைக்குவிளக் காகிய வாணுதல்
-புறநானூறு:314:1
மனைக்கு விளக்கம் மடவாள்
-நான்மணிக்கடிகை: 105:1
ஒன்றன்கூ றாடை யுடுப்பவரே யாயினும்
ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை.
--பாலைக்கலி: 18:9-11
இருதலைப் புள்ளின் ஓருயி ரம்மே
-அகநானூறு:12:5
மறுவில் கற்பில் வாணுதல் கணவன்
- திருமுருகாற்றுப்படை:6