இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
16
பாவைப் பொம்மைக்குப் பால் வாராத முலைகொண்டு பாலூட்டுகின்றாள் ஒரு பெண்.
உறாஅ வறுமுலை மடாஅ
செந்நிறக் கோடுகளிட்டு அழகாகச் செய்த செப்புக்களும் பொம்மைகளும் கொண்டு சிற்றில் கட்டி விளையாடுகிறாள் தலைவி:
சுடர்விரி வினைவாய்ந்த தூதையும் பாவையும்
அடுத்து, தன்னோடொத்த இளைய மகளிர் சூழ, வகை வகையாக அணி புனைந்து, தைத்திங்களில் நல்ல கணவனையடையவேண்டித் தவத்தலைப் படுகிறாள்.
வையெயிற் றவர் நாப்பண் வகையணி பொலிந்துநீ
விளையாட்டு மாறாத நிலையில், பிறர் மனைகள் தோறும் சென்று பாடிக் கிடைத்ததைப் பலருக்கும் கொடுத்து நோன்பியற்றுகின்றாள்;
பொய்தல மகளையாய்ப் பிறர்மனைப் பாடிநீ
எய்திய பலர்க்கீத்த பயம்பயக் கிற்பதோ
சிறுமுத்தனைப் பேணிச் சிறுசோறு படுத்து நீ
இவையெல்லாம் சின்னஞ்சிறு பருவ விளையாட்டுக்களாகும்.