30
கற்பெனப் படுவது காணமொடு புணரக்
கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
இவ்வாறின்றித் தலைவியின் பெற்றோர் திருமணத்தில் தலைவனுக்குத் தர உடன்படாதபோது தலைவியோடு உடன் போக்கு (elopement) ஒருப்பட்டுத் தலைவன் வேற்றூர். சென்று தலைவியை மணந்து கொள்வன் என்பதனையும் தொல்காப்பியனார் குறிப்பிட்டுள்ளார்.
கொடுப்போர் இன்றியும் கரணம் உண்டே
ஆயினுங் காலப்போக்கில் பொய் கூறுதலும் வழுப்பட வொழுகலும் தோன்றிய பின்னர்ச் சமுதாயப் பெரியோர்கள் ‘கரணம்’ எனும் சடங்கினைப் புகுத்தினர் எனத் தொல்காப்பியனார் குறிப்பிடுகின்றார்.
பொய்யும் வழுவுங் தோன்றிய பின்னர்
இந்நூற்பாவிற்கு (Sutra) இளம்பூரணர் பின்வருமாறு உரை விளக்கம் கூறியுள்ளார்:
இரண்டும் (பொய்யும் வழுவும்) தோன்றுவது இரண்டாம் ஊழியின் கண்ணாதலின், முதலுாழியிற் கரணமின்றியே இல்வாழ்க்கை நடந்ததென்பதூஉம், இவை தோன்றிய பின்னர்க் கரணந் தோன்றின. தென்பதூஉம் கூறியவாறாயிற்று. பொய்யாவது செய்ததனை மறைத்தல். வழுவா