இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
'சங்க கால வள்ளல்கள்' என்னும் பெயருடன் வெளிவரும் இந்நூல், கடையெழு வள்ளல்களின் வரலாற்றை முறைப்படி அறிவிக்கும் ஒரு நூலாகும். இது பெரிதும் புறநானூற்று நூலையே அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருத்தலின், இன்னோரன்ன வரலாறுகள் பலவற்றை அந்நூலினின்று மாணவர்கள் படித்தற்குத் துணைசெய்ய ஒரு தூண்டுகோலாக இருக்கும் என்னும் எண்ணங்கொண்டே இஃது எழுதப்பட்டுள்ளது. பிறமொழிச் சொற்கள் பெரிதும் கலவாது, செந்தமிழ் மொழிச் சொற்களையே துணையாகக்கொண்டு எழுதப்பட்டிருப்பதால், தனித் தமிழ் நடை எழுத விழையும் மாணவர்கட்கு இந்நூல் துணை செய்யும் என்பதும் என் துணிபு.
இந்நூலைத் தமிழ் உலகம் ஏற்று, என்னை இத் துறையில் மேன் கத் துணைபுரியும் என்று எதிர்பார்க்கின்றேன்.
“அம்மையப்பர் அகம்“ 77, அவதானம் பாப்பையர் தெரு, சூளை,சென்னை 16-11-1951 |
இங்ஙனம்,
பா. து. க. |