பக்கம்:சங்க கால வள்ளல்கள்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சிறுபாணாற்றுப்படை


வானம் வாய்த்த வளமலைக் கவாஅன்
கான மஞ்ஞைக்குக் கலிங்கம் நல்கிய
அருந்திறல் அணங்கின் ஆவியர் பெருமகன்
பெருங்கல் நாடன் பேகனும் சுரும்புஉண
நறுவீ உறைக்கும் நாக நெடுவழிச்
சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
பிறங்குவெள் அருவி வீழுஞ் சாரல்
பறம்பின் கோமான் பாரியும் கறங்குமணி
வால்உளைப் புரவியொடு வையகம் மருள
வீர நல்மொழி இரவலர்க்கு ஈந்த
அழல்திகழ்ந்து இமைக்கும் அஞ்சுவரு நெடுவேல்
கழல்தொடித் தடக்கைக் காரியும் நிழல்திகழ்
நீல நாகம் நல்கிய கலிங்கம்
ஆல்அமர் செல்வற்கு அமர்ந்தனன் கொடுத்த
சாபம் தாங்கிய சாந்துபுலர் திணிதோள்
ஆர்வ நல்மொழி ஆயும் மால்வரைக்
கமழ்பூஞ் சாரல் கவினிய நெல்லி
அமிழ்துவிளை தீங்கனி ஔவைக்கு ஈந்த
உரவுச் சினம்கனலும் ஒளிதிகழ் நெடுவேல்
அரவக் கடல் தானை அதிகனும் கரவாது