பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 சடகோபன் செந்தமிழ் ஒரே பாசுரத்தால் இத்திருக்கோயில் எம்பெருமானை மங்களாசாசனம் செய்துள்ளார். கூடச்சென் றேன்.இனி என்கொ டுக்கேன்? கோள்வளை, கெஞ்சத் தொடக்க மெல்லாம் பாடற் றொழிய இழந்து, வைகல் பல்வளை யார்முன் பரிச ஜிக்தேன் மாடக் கொடிமதிள் தென்கு ளங்தை வன்குட பால்கின்ற மாயக் கூத்தன் ஆடற் பறவை உயர்த்த வெல்போர் ஆழி வலவனை ஆத ரித்தே --திருவாய் 8.2 4 (கோல்வளை - அழகிய வளை: பாடு அற்று - மீதியில் லாமல் நீங்கி; வைகல் - நெடுங்காலமாகவே: குடபால் - மேற்குப் பக்கம், பறவை - கருடன், ஆழி வலவன் - சக்கரத்தை வலக்கையில் உடையவன்; என்பது பாசுரம். பாசுரத்திலேயே திருக்கோயில் ஊரின் மேற்குப் பக்கத்தில் இருப்பதையும், எம்பெருமான் நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிப்பதையும் அறிய முடிகின்றது. இது நாயகி நிலையில் மகள் பாசுரமாக நடைபெறுகின்றது. எம்பெருமானுடன் கலந்து பிரிகின்றாள் ஒரு பிராட்டி. அவன் மறுபடியும் தன்னிடம் வரும் வரையில் அவளால் பொறுத்திருக்க முடியவில்லை. ஆகவே, தானே அவன் இருக்கும் இடத்தை நோக்கிப் புறப்படுகின்றாள். இதுகண்ட தோழிமார் முதலானோர் படி கடந்து இங்கினம் அவள் புறப் படுவது அவள் நிலைக்கு ஆகாது என்று அறிவுரை பகன்று அவளை நிறுத்தப் பார்க்கின்றனர். அவளோ தனக்கு எம்பெருமான் விஷயமொன்று தவிர, மற்று எதிலும் நசை இல்லாமையைச் சொல்லி அவர்கள் அறிவுரைக்குத் தன்னால் இணங்க முடியாமையைச் சொல்லுவதாக அமைந்தது இப்