70 சடகோபன் செந்தமிழ் விட்டான்” (83) என்று அருளிச் செய்யப்பட்டிருக்கின்ற தன்றோ? அப்படிப்பட்டவர் அவ்வூரில் ஒருமகிழ மரத்தடி யிலே இருந்து திருவலகிடா நிற்கையில் உண்மையுணர்வற்ற ஒருவன் எம்பெருமானே உபாயம் என்றிருக்கிற அநந்யப் பிரயோஜநர் இங்ங்னே கிலேசப்படுவது எதற்காக: என்றானாம்; அப்போது திருவலகிட்ட இடத்தையும் இடாத இடத்தையும் காட்டி, இவ்விடமும் அவ்விடமும் இருந்தபடி கண்டாயே; இதற்கொருபலமில்லை என்று தோற்றி இருந்ததோ?’ என்று பணித்தாராம் திருக்கண்ணமங்கை யாண்டான்.ஈண்டு அறியத்தக்க வேண்டுவதாவது-திருஷ்டப் பிரயோஜனம் (= நேரில் காணும் நன்மை அதாவது இம்மைப் பயன்) என்றும், அத்ருஷ்ட பிரயோஜநம் (= மறுமைப்பயன்) என்றும் பிரயோஜநம் இருவகைப்படும். அத்ருஷ்டப் பிரயோஜதத்திற்கொரு ாததாதுஷ்டானம் பண்ணாமையே அநந்பப்ரயோஜநற்குற்றது. சந்நிதி வாசலை அலகிடுதல் முதலிய திருப்பணிகளை ஒரு ப்ரயோஜ நாயேட்சையின்றிக்கே செய்வதனால் ஒருகுறையும் இல்லை; இது நிஷ் ப்ரயோஜதம்தானே என்ன வேண்டா திருவலகிடாத இடம் கண்கொண்டுகாணவொண்ணாததாயும்,திருவலகிட்ட திாக இருக்கிறபடியைக் கண்டு, ஒரு சிறிய மனிதன் த ன் ன பி ம ன த் தி லே ஒதுங்கினது என்னும் இவ்வளவுக்காகத் தன்னை அழிய மாறினபடியைக் தண்டால் பரமசேதநன் (=இறைவன்) அபிமானத் திலே ஒதுங்கினால் அவன் என்படுமோ?! என்று தம்மைப் பாதுகாத்தற்குரிய செயல்களை அடைய விட்டு, அந்நாயினைப் போன்று தம்மை நினைத்துக் கொண்டு அப்போதே வந்து திருக்கண்ணமங்கையில் பத்தராவில் திருவாசலில் (= பத்தராவிப் பெருமாள் சந்நிதியின் திருவாசவில்} கைப்புடையிலே{-கோபுர வாசலுள் இருக்கின்ற ஒட்டுத்திண்ணை, கை-சிறிய: புடை - இடம்) புகுந்து கண் வளர்ந்தார் என்பது பிரசித்தமிழே. -