பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

في عر பாண்டிநாட்டுத் திருப்பதிகள் - 77 உகக்கும் அன்னையைப் போல, அடிமையாக இருப்பவன் ஸ்வரூபம் பெற்று அடிமை செய்கை சே ஷி க் கு ப் பேறேயன்றோ? என்பது எண்ணி எண்ணி மகிழ்த்தக்கது." இத் திருக்கோயிலில் நடைபெற்று வரும் எண்ணெய்க் காப்புத் திருமஞ்சனமே இத்தலத்தின் சிறப்பாகும். ஆறு படி நல்லெண்ணெயுடன் சிறிதளவு சந்தன எண்ணெயைச் சேர்த்துக் காப்பு நடைபெறுகின்றது. இங்ங்னம் மூலவர் தோத்தாத்திரி நாதருக்குத் திரு மஞ்சனம் செய்யப்பெற்ற எண்ணெயை ஓரிடத்தில் சேகரம் செய்து அதனைப் பின்னர் வீரப்பநாய்க்கர் மண்டபத்திற்குப் பின்புறம் உள்ள எண்ணெய்க் கிணற்றில் விட்டு விடுகின்றனர். நாம் கால்படி நல்லெண்ணெய் கொணர்ந்தால் அதனை இக் கிணற்றில் ஊற்றி விட்டு அக்கிணற்றிலிருந்து கால் படி எண்ணெயை எடுத்துக் கொள்ளலாம். கோயில் ஆட்சியாளரிடம் சொன்னால் எடுத்துத் தருவர். இந்த எண்ணெய் தீராத சரும நோய், குட்டம் (தொழு நோய்) முதலிய நோய்களை யெல்லாம் தீர்க்கின்றது என்று மக்கள் நம்புகின்றனர். வடநாட்டுப் பக்தர்கள் இந்த எண்ணெயை அதிகமாக வாங்கிச் செல்லுகின்றனர். இந்த எண்ணெயின் பெருமையை குறுமுனியாகிய அகத்தியரே அவருடைய மருத்துவ முறையில் குறிப்பிட்டுள்ளார். 12. திருக்குறுங்குடி **:இத்திருத்தலத்தில் எம்பெருமான் திருவருளால்தான் நம்மாழ்வார் அவதரித்தார் என்பது 23. மேலும் இந்த அநுபவம் அறிய வேண்டுவோர் இந்த ஆசிரிரியன் 'பாண்டி காட்டுத் திருப்பதிகள்' (கட்டுரை-17) கண்டு தெளிக 24, க்குறுங்குடி : இத்திருத்தலம் திருநெல்வேலி - క్డౌ ಫ್ಲಿಕ್ಗೆ வழியிலுள்ள சேரமாதேவி நிலையத்திலிருந்து 15 கல்தொலைவு, வான மாமலையிலிருந்து மேல் திசையில் எட்டுக்கல் தொலைவிலுள்ளது, பேருத்தில் சென்று வரலாம்,