பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மலைநாட்டுத் திருப்பதிகள் 99 தேனார் சோலைகள் சூழ் திருவல்லவாழ் உறையும் கோனாரை அடியேன் அடிகூடுவ(து) என்றுகொலோ (8.9:1) (மானேய்ன்மான்போன்ற, வைகலும் . நாள்தோறும்; மெலிய-இளக்கும்படி; மது-தேன்: தேன் ஆர்.தேன் நிரம்பிய) என்பது இத் திருவாய்மொழியின் (3.9) முதற்பாசுரம். ஆகாயம் வரையிலும் உயர்ந்திருக்கும் வளப்பமுடைய பாக்கு மரங்களும் தேன் பொருந்திய மல்லிகையும், வாசனை வீசு கின்ற சோலைகளும் சூழ்ந்திருக்கும் இடம் திருவல்லவாழ் என்ற திருப்பதி. தான் மெலிவதற்காகவே கமுகுகள் வானத்தைக் கண்செறி இட்டாற்போல (கபளிகரித்தல் போல்)இருக்கின்றன என்பது பராங்குச நாயகியின் நினைப்பு. தான் இருக்கின்ற இடம் மரங்கள் யாவும் உலர்ந்துவிட்டன: என்னும்படியாகவும், அவன் (எம்பெருமான்) இருக்கும் இடம் காலம் அல்லாத காலத்திலும் மரங்கள் பலனைக் கொடுக்கக் கூடியனவாகவும் இருக்கும்’ என்றும் எண்ணுகின் றாள். இருவராய்க் கொண்டு பரிமாற வேண்டும் தேசத்தில் தனியே நிற்கின்றான் காண் என்பது தோன்ற தேனார் சோலைகள் சூழ் திரு வல்ல வாழ் உறையும் கோனாரை” என்று குறிப்பிடுகின்றாள். மேற்குறிப்பிட்ட பொருளைச் சிந்தித்த நிலையில் 'கோனாரை அடியேன் அடி கூடுவது என்று கொலோ?? என்ற அடிக்கு ஈட்டின் ஆசிரியர் நம்பிள்ளை கூறும் மெய்ப் பொருள் நம் சிந்தையில் எழுகின்றது. 'நாராயண சப்தத் திலும் பிரணவத்திலும் போலே கோனாரை அடியேன்” என்கின்றாள். அவனைச் சொல்லும்போது தம்மை யிட்டல்லது சொல்லப் போகாது. தம்மைக் சொல்லும்