பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#18 சடகோபன் செந்தமிழ் செய்துள்ளார் ஆழ்வார் என்று பாசுரத்தில் மிகவும் ஈடு பட்டாராம். அதனை நினைவு கூர்ந்து நாமும் பாசுரத்தில் தோய்ந்து அநுபவிக்கின்றோம். அறுக்கும் வினையாயின ஆகத்து அவனை கிறுத்தும் மனத்தொன்றிய சிக்தையி னார்க்கு (1) (அறுக்கும் - போக்கும்: ஆகத்து உள்ளத்தில் ஒன்றிய ஒருமைப்பாடுடைய) என்பது பாசுரத்தின் முதல் இரண்டு அடிகள் . 'அப் பொழுதைக்கு அப்பொழுது ஆரா அமுதமாக இனிக்கும் எம்பெருமானைத் தங்கள் உள்ளத்தில் நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தினையுடையவர்கட்கு, திருநாவாய் அண்மைக்கு வரும்படியான உபாய முண்டோ என்பது பராங்குச நாயகியின் எண்ணம், வினையாயின? என்பதனால் விரோதிகளைக் குறிப்பிடுகின்றார் ஆழ்வார். , அந்த விரோதிகள் சொரூப விரோதி, உபாய விரோதி: பிராப்பிய விரோத் என்று திருமந்திரப் பொருளில் கூறப் பெறும் மூன்று விரோதிகளாகும். இவற்றைத் தவிர பழ வினை (சஞ்சிதம்) நுகர்வினை (பிராரப்தம்), எதிர்வினை {ஆகாமியம்)போன்ற வினைத்தொகுதிகளும் உள்ளன. இவை யனைத்தும் அடங்கியவையே வினையாயின வாகும். எம் பெருமானை உள்ளத்தில் நிலை நிறுத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்களிடம் இவ்விரோதிகள் யாவும் அணுகா என்பது கருத்து:" கேரளத் திருத்தலப் பயணத்தில் அவசரம் கூடாது. நிதானமாகப் பார்த்து வருதல் வேண்டும். சொந்த வாகன 25. முமுட்சுப்படி - 83, 84, 85. 27. மேலும் இப்பதிக அநுபவம்பெற விழைவோர்மலை காட்டுத் திருப்பதிகள் (கட்டுரை- 13) காண்க,