பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#90 சடகோபன் செந்தமிழ் வோம். பெற்றோர் அல்லது உறவினர் கூட்டாமலேயே தலைவனுடன் இயற்கைப்புணர்ச்சி புணர்ந்து தலைவலு டைய ஒப்புயர்வற்ற வனப்பு முதலியவற்றில் ஈடுபட்டு இருப்பவன் மகள்: குடியின் கட்டுப்பாட்டையும் பாராமல் அவனைக் கிட்டியல்லது உயிர் வாழ்ந்திருக்கமாட்டேன்’ என்னும் பதற்றத்தை உடையவள் இவள். காலக் கழிவை இவளால் சிறிதேனும் பொறுக்கமுடிவதில்லை. பிரணவத்தி னாலும் நமஸ்ஸாலும் எ ல் லோ ருக்கு ம் சேஷியாய் தலைவனாய்). சரண்யனாய், அறுதியிடப் பெற்றவன் எம் பெருமான். எல்லோருக்கும் புகலிடமாக இருப்பவனும் இவனே, பிரணவத்தாலும் நமஸ்ஸாலும் இவை உணரப் பெற்றபின்பு நாராயணாய' என்ற சொல்லினால் கூறப் பெற்றுள்ள சொரூபம், ரூபம், குணம், விபூதி முதலியவற்றின்’ சேர்க்கையாலுள்ள பெருமையை நினைந்து ம கி ஆழ் ப வள் இவள். எம்பெருமான் சாத்தியோபாயமாக" இருந்தால் தான் செய்யும் சாதனங்கள் முடிவுற்ற பிறகே சாத்தியமா கின்ற பேறு கிடைக்கக் கூடும் என்று பொறுத்திருக்கலாம், ஆனால், அவன் சித்தோபாயமாக' இருப்பவன். அதனால் அவனைத் தாமதித்து அநுபவிக்கக் காரணம் இல்லை. "அவனே உபாயம் என்ற கோட்பாட்டையும் மீறித் தான் நினைத்த பேற்றினை உடனே பெறவேண்டும் என்ற பதற்றத்தை உடையவளாக இருக்கின்றாள் இவன். இந்த 9. சொரூபம்: ஈசுவரனின் தியானத்திற்குரியசொரூபம்; ரூபம்-பகவானுடைய திவ்விய மங்கள விக்கிரகம்: குணம்-ஆன்ம் குணம், விக்கிரக குணம். ஆன்ம குண்ங்கள்-ஞானம், சக்தி முதலியன், விக்கிரக குணம்-அழகு மென்மை முத்லியன, விபூதி-நிய மிக்கப்படும் பொருள் (ஐசுவரியம்), 10. கருத்தியோபாயம்-மக்களுல் சாதித்துக் கொள்ளு கின்ற் உபாயம் எடு. பக்தி, பிரபத்தி, . 11. சித்தோபாயம் முன்னமே இருக்கும் உபாயம்: அஃதாவது இறைவனாகிய உபாயம்.