பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள் 213 வேறுபாட்டாலும் புணர்ச்சி நடைபெற்றமையை ஒருவாறு அறிகின்றாள். தன் மகளின் உண்மை நிலையை அறியாத தாய் தந்தையர் இவளுடைய திருமணத்தை உறுதி செய்து மனமுரசும் அறிவிக்கின்றனர். இதனை அறிந்த தோழி மனம் கவல்கின்றாள். 'பரதனே அரசன்' என்று அறிவித்த முரசொலி கேட்டபோது பரதாழ்வான் எங்ங்னம் மனக் கிலேசம் அடைந்தானோ அங்ங்ணமே தோழி இப்போது துயர் அடைகின்றாள், இவ்வாறு சிந்திக்கின்றாள்: ‘மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் (நாச். திரு. 1:3) என்று கூறியவள் இவள். அன்றிப்பின் மற்றொருவர்க்கென்னைப் பேசவொட்டேன் மாலிருஞ் சோலை எம்மாயற்கல்லால் (பெரியாழ். திரு. 3.4:S) என்ற பிடிவாதத்தைப் பிடிக்கின்றவள். மாறாக ஏதேனும் நடை பெற்றால், இவள் உயிர்தரியாள். அப்படி நடைபெறுவதை எப்படியாயினும் தடுத்தேயாக வேண்டும். அங்ங்னம் செய்ய முயலுங்கால் திருப்புலியூர் நாயனாருடன் புணர்ச்சி உண்டானமையை அறிவிப்பின் அஃது என் காவற் சோர்வாலே நிகழ்ந்தது என்று ஏற்பட்டுவிடும். அறிவியாது ஒழியில் இவள் வாழாள். இந்த நிலையில் செய்யவேண்டியது என்ன?’ என்பதாக. - - தோழி இங்ங்னம் சிந்தித்துக் கெண்ாடிருக்கும் பொழுது தலைவியின் பெற்றோரும் அவளுடைய வடிவ வேறுபாட்டிற்குக் காரணம் யாதாக இருக்குமோ என்று ஆராயும் நிலையைக் காண்கின்றாள். தான் அவர் களுடன் ஆராய்வதாகச் சேர்ந்துகொண்டு இதனை விலக்க வேண்டும் என்று உறுதி செய்கின்றாள். இந்த முறையைக் கூறுவதாக அமைந்ததே இத் திருவாய்மொழி. இதுவே அகப்பொருள் நூலார் குறிப்பிடும் அறத்தொடு நிலை என்பதாகும். திருப்புலியூர் எம்பெருமான்மீதுள்ள திருவாய் மொழி இதனையே கூறுகின்றது.