பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோழிப் பாசுரங்கள் - 217 தகழும் மணிகெடு மாவும்: கீடு திருப்புலியூர்வளமே.(3) (பொருநீர்கடல் அவை எறியும் கடல்; தீப்பட்டு - நெருப்புக் கொளுத்தி, எரி-திக்கொழுந்து, ஆழி - சக்கர்ம்; பொருபடை போர் செய்யும் ஆயுதங்கள் ப்ெசன்றுவித்தான் அழித்தவன்) என்து ப்ாசுரம். கடல் வண்ணனான எம்பெருமான் திருவாழியாழ்வான் முதலான திவ்வியாயுதங்களை அணித்து கொண்டு எழுந்தருள்வது ஒரு கடல் நெருப்புக் கொளுத்தி நடந்து செல்லுகின்றதோ?’ என்று ஐயுறும்படியாகவுள்ள தென்கின்றாள். அன்றியும் இந்த எம்பெருமான் திருவாழி திருச்சங்கு முதலிய திவ்வியாயுதங்களுடன் போர்க்களத்தில் சென்று அரக்கர்களைத் தொலைத்தருளும் பேராற்றலை இரவும் பகலும் இடையூடின்றிப் புகழ்ந்து கூறா நின்றாள். இதனாலும் இத்திருப்பதி எம்பெருமானுடன் இவளுக்கு ஒரு சம்பந்தம் நிகழ்ந்ததாகத் தோன்றுகின்றது என்று குறிப்பாகப் புலப்படுத்துகின்றாள் தோழி. மேலும் தோழி கூறுகின்றாள்: 'வண்டினம் முரலும் சோலை, மயிலினம் ஆலும் சோலை, கொண்டல்மீ தணவும் சோலை, குயிலினம்.கூவும்சோலை, அண்டர்கோன் அமரும் சோலை, (திருமாலை-14)என்றெல்லாம் சோலை வளத்தைப் பேசுகின்றாள். வயலடங்கலும் கரும்பும் செந்நெலுமாய் வளர்ந்திருக்கும் அழகைச் சொல்லுகின்றாள். அங்கு உழுவதும் நடுவதுமான பண்ணையில் நடைபெறும் செந் நெல்களின் அழகினையும், சுற்றிலும் நீர் நிலைகள் சூழ்ந் திருக்கும் வனப்பையும் வாய்வெருவுகின்றாள். இங்ஙனம் பெண் பிள்ளை பேசும் அழகுகளை என் சொல்லுவேன்? இத்துடன் நின்றாளா?