பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. மகள் பாசுரங்கள்-தூது பற்றியவை இlது என்பது, ஒருவர் தம்முடைய கருத்தை வேறொரு வருக்கு இடை நின்ற ஒருவர் வாயிலாகக் கூறி விடுப்பது, சங்க இலக்கியங்களில் 'காமம் மிக்க கழிபடர்கிளவிகளாக' இருந்த துறையே, பிற்காலத்தில் தூது இலக்கியங்களாக வடிவு கொண்டதுள்ன்பது ஆய்வாளர்களின் கருத்து. பக்தி இலக்கியங்கள் வளர்ந்த காலத்தில் ஆழ்வார் பெருமக்கள் இந்த அகத்துறையைப் பயன்படுத்திய அருமைப்பாட்டினை ஈண்டுக் காண்போம். ஆழ்வார் திருமொழிகளில் அவர்கள் தாமான தன்மையை விட்டுப் பிராட்டியாரின் நிலையை ஏறிட்டுக்கொண்டு பாசுரங்கள் அமைக்கப்பெற்றிருக்கும். பெரும்பாலும் ஆழ்வார்கள் புள்ளினங்களையே தூது போகும்படியான பாசுரங்களை அமைப்பர்; குருகினங்கள், நாரைகள், அன்னங்கள், பூங்குயில்கள், கிளி, மயில், வை, அன்றில்கள், வண்டினங்கள் முதலியவை தூதுவிடும் பொருள்களாக அமைந்திருப்பதைக் காணலாம். இவற்றைத் தவிர வாடை, மேகம், நெஞ்சு போன்றவற்றையும் இவர் தம் பாசுரங்களில் தூதுப் பொருளாக அமைத்திருப்பதையும் கண்டு மகிழலாம். இங்ங்ணம் பறவைகளைத் தாது விடுத்தற்கு உட்பொருள் உண்டு. ஆசாரிய ஹிருதயம்,