பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/378

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறையதுபவம் 839 கொண்டு அவன் முன்னே வந்து நிற்க, காதல் வளர்வதற்கு வழி உண்டாயிருந்ததே அல்லது அளவு படுகைக்கு வழி உண்டோ? அவன் முன்னே வந்து நின்றிலனாகில் நான் காதலை அடக்கி உங்கள் வார்த்தையைக் கேட்கமாட் டேனா?” என்கின்றாள். "நங்காய் நீலமுகில் வண்ணன் உன் முன்னர் வந்து நின்றானாகில் அவனது கையைப் பிடித்துக் கொண்டு நீ அவன் பின்னே போக்லாமல்லவா? காலம் பெற என்னைக் காட்டுமின்கள்’ என்று சொல்லுவதென்?" என்று தோழியர் கேட்க, என் கைக்கும் எய்தான் என்கின்றாள். 'உருவெளிப் பாடேயல்லது வேறொன்றில்லையே வார்த்தை சொல்லு தல், அணைத்தல் செய்யாமையே யன்று. என் கைக்கும் எட்டுகின்றிலன்; ஆகையால் சொல்லுகின்றேன்” என் கின்றாள். எங்கே கொண்டு போய்க் காட்டச் சொல்லு கின்றாய்?" என்று தோழியர் கேட்க, அதற்குப் பாசுரத்தின் பின் அடிகளில் விடை கூறுகின்றாள். ஞாலத் தவன்வந்து வீற்றி ருக்த கான்மறை யாளரும் வேள்வி யோவா கோலச் செங்கெற்கள் கவரி னீசும் கூடு புனல்திருப் பேரெ பிற்கே (7.3:6). நெடுந்தூரம் சென்று காண வேண்டாமல் பரமபதத்துச் செல்வமெல்லாம் இங்கே தோற்றும்படி வீற்றிருக்கும் இட் மன்றோ தென்திருப்பேரெயில்? அதுமட்டுமன்று. வேத வித்துக்களான பரம பாகவதர்களின் சம்ாராதனமும் நிர்ந் தரமாகச் செல்லும் இடம் அன்றோ?. இவையொன்றும் இல்லையாகிலும் திவ்வியதேசத்தின் நிலவளமும் நீர் வளமுமே கண்ணாரக் கண்டு கொண்டிருக்கப் போதுமே: