பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 சடகோபன் செந்தமிழ் ஆழ்வார் தம்முடைய அபிதிவேசம் பெரியவற்றிலும் பெரிது என்கைக்காக மூன்றடி களில் தத்துவத்திரயத் தினுடைய பெருமையை அருளிச் செய்கின்றார். அசித் து என்ற தத்துவத்தினுடைய பெருமையைச் சொல்லுகின்றது முதலடி, ஒத்து என்ற தத்துவத்தினுடைய பெருமையைக் சொல்லுகின்றது இரண்டாம் அடி, ஈசுவரன் எனற தத்து வத்தைச் சொல்லுகின்றது மூன்றாம் அடி. இப்படித் தத்து வத்திரயத்தை ஒன்றுக் கொன்று பெரிதாகச் சொல்லிக் கொண்டு போந்து இவற்றிற் காட்டிலும் பெரிது தம்முடைய அவா என்று ஈற்றடியில் அருளிச் செய்து, அது ஆன அறச் குழ்ந்தாயே என்று தலைக் கட்டுகின்றார். - - - - - இங்கு என் அவா அந’ என்பதற்கு என்னுடைய அவா சிறிதென்னும்படி என்றுபொருள் கொள்ளுவது சிறக்கும்.இது வரையில் ஆழ்வார் தம்முடைய அவாவே பெரிது என்றிருந் தார். இப்போது தம்மை அநுபவிக்கப் பதறிவந்த எம்பெரு மானுடைய அவாவின் மிகுதியைப் பார்த் தவாறே மேற்கூறிய 'மூன்று தத்துவங்களையும் விளாக்குலை கொண்டு அவை குளமாம்படி பெரிதான என்னுடைய காதலை அதனினும் பெரிய உன் காதலைக்காட்டி வந்து கலந்தாயே! என்னுடைய கூப்பீடும் ஒருபடி ஒவும்படிப் பண்ணிற்றே" என்கின்றார். பரடிகாதனை மடியிலே வைத்துக்கொண்டு மகிழ்ச்சி புற்றவராய்த் தழுவினார்" என்கின்றபடியே, பெருமாள் காட்டில் நின்று மீண்டெழுந்தருளி பரதாழ்வானை மடியிலே வைத்து உச்சியை மோந்து உகந்து அனைத்தாற் போலே ஆயிற்று, இவருடைய விடாய் கெடும்படி கலந்தது. பாசுரங்களின் பயன்: எம்பெருமானை ஆழ்வார். ஞானக் கண்ணாற் கண்டு. சொல் மாலைகள் சொன்னார். கண்டு மகிழ்ந்ததன் பயன், சொல்மாலைகள் சொன்னதாகும். இந்தச் சொல் மாலைகளால் இரண்டு பயன்கள் விளைவன வாயின. ஒன்று : ஆழ்வாரின், பண்டை வினையாயின.