பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவத்திரயம் 363 இவற்றிலும் வேறுபட்டதாய், இவை அழிந்தாலும் ඵ්.(..... ழ்ேயாமல் இருந்து இவற்றை நியமிக் கின்றதுமாய், வேறுபட்ட சிறப்பினையுடையதுமான ஆன் மாவைக் குறிப்பதற்காக நின்ற ஒன்றை என்று குறிப் பிட்டார். எம்பெருமான் தனக்குப் பிரகாரமாக (வழியாக) , நின்று காட்டி கொடுக்கத் தான் உணர்ந்ததாகக் குறிப்பிடு > கின்றார். உணர்ந்தேனுக்கு-ஆராய்ந்தேனுக்கு என்ப தனால் இது பெறப்படுகின்றது. மேலும், இதுகாறும் ஆழ்வார் ஆன்ம சொரூபத்தை உணராதிருந்து இப் போதுதான் உணரப் பெற்றார் என்பதையும் இது குறிப் பிடுவதாகக் கொள்ளலாம். உயர்வற உயர் நலமுடையவன் (1.1:1) எம்பெருமானாகையால் அவனுடைய அநந்தி கல்யாண குணங்களில் இழிந்து அவற்றை அநுபவித்த வராதலால் மின்மினியோலே இருக்கின்ற ஆன்மசொரூபத் தில் கண் வைத்தார் இலர். தவிர, ஞானம் கனிந்த பக்தி வழியாக ஞானம் அடைந்தவராதலால், ஆன்மாவைப் பற்றிச் சிந்திக்கவும் இவருக்கு நேரம் கிடைத்திலது என்றும் கருதலாம். இந்த ஆன்ம சொரூபம் அவருக்கு எப்படி விளக்க மாயிற்று? அதன் வேறுபட்ட தனிச்சிறப்பை அதன் நுண்மை’ என்ற சொற்றொடர் விளக்குகின்றது. அதன் சிறப்புத் தன்மையைச் சிறந்த ஞானியராலும் அறிய முடியாது."இஃது உணர்ந்தும் மேலும் காண்பரிது’ என்ற சொற்றொடரால் குறிப்பிடப் பெறுகின்றது. இப்படி யிருக்க, ஆன்ம சொரூபம் இவருக்கு எப்படி விளக்கம் அடைந்தது? எம்பெருமான் காட்டிக் கொடுக்கக் கண்ட தமக்குத் தெரிந்தபடியை விரித்துரைக்கின்றார் ஆழ்வார் பின்னிரண்டடிகளில், - ... - . . . . தைத்திரீய உபநிடதத்தில் முதலில் அன்னமயமும் அதற்கு அடுத்து மனோமயமும் சொல்லப் பெற்று அதற்கு - * స్ట్రో SS- 3 ് കുറും * چاد & నత్రజ్ఞ