பக்கம்:சடகோபன் செந்தமிழ்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருப்பதிகள் 39 (இன்று-மயர்வற மதிநலம் அருளப்பெற்றபின்பு; அன்று. அவருடைய திருவருளைப் பெறுவதற்கு முன்பு: புறம் போகப் பண்ணுதல் - பராமுகம் செய்தல்; - புணர்த்தல் - மாயையை இட்டு மயக்குதல்) என்பது வினா? இப்பாசுரம் இத்திருவாய்மொழியின் உயிரானது. இந்த வினா மூன்று வகையில் அமைகின்றது. முதல் வகை: தனக்குத் தானே சிந்தித்தவில் நோக்கு. இரண் டாவது வகை: இறைவனைக் குறித்துக் கேட்டவில் நோக்கு: மூன்றாவது வகையில் அதிசங்கையில் நோக்கு. இவ்விடத்தில் ஒர் இதிகாசம். ஆழ்வார் எம்பெருமானை நோக்கி இப்படி ஒரு வினா எழுப்பினாரே, இதற்கு எம்பெருமான் என்ன மறுமொழி கூறினான்? என்று நஞ்சீயர் பட்டைரைக் கேட்க, அதற்குப் பட்டர் அவன் பதில் சொல்வதற்கு என்ன இருக்கின்றது? இவர்தலையிலே ஒரு பழியை ஏறிட்டுப் பல காலம் இழந்து கிடந்த நாம் சொல்லுவது ஏன்? என்று நாணம் உற்றவனாய்க் காலாலே தரையைக் கீறி நிற்பதைத் தவிர வேறுண்டோ என்று அருளிச்செய்தார். எம்பெருமான் கூறிய விடை: "நீர் பெற வேண்டிய பேற்றினைப் பெற்றி ராகில் அதுவே அமையாதோ? என்ன, அதுவே அமையும்' என்கின்றார். தேங்காய்க்கு இளநீர் புக்கவழி ஆராய்ந்தோ விடாய்த்தவன் இளநீர் குடிப்பது? பின்னர் ஆழ்வார், திருவாய் மொழி பாடுகையாகின்ற இக்கைங்கரியத்தைப் பரமானந்தமாகச் செய்யப் பெற்ற எனக்கு வேறு என்ன விருப்பம் உள்ளது?’ என்கின்றார். உற்றேன் ; உகந்து பணிசெய்து உன்பாதம் பெற்றேன்: ஈதே இன்னம் வேண்டுவது? - {1} (பணி-திருவாய் மொழி பாடுகை; ஈதே.இதுவே)