பக்கம்:சடுகுடு ஆட்டம்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

125


பாடிச் செல்பவர்களுக்கு

1. எதிர்க்குழு பகுதியிலே பாடிக் கொண்டிருக்கும் பொழுது இயன்றவரை, தனது கைகளையும் கால்களையும் நீட்டிப் பயன்படுத்தித் தொட முயல வேண்டும்.

2. பாடிச் செல்பவர் எந்த நிலையிலும், எந்தக் காரணத்தை முன்னிட்டும் தனது முதுகுப்புறத்தை (Back) பிடிப்பவர்களிடம் காட்டியவாறு பாடிக் கொண்டு இருக்கக்கூடாது.

3. ஒரே சீராகவே பாடிக் கொண்டிருந்துவிட்டு, அதாவது ஆரம்பம் முதல் முடிவு நேரம் வரை ஒரே மாதிரியாகப் பாடிக் கொண்டு வருவதுதான் சிறந்த பாடும் முறையாகும். வீணே கத்துவதிலோ, அலட்டிக் கொண்டு பாடுவதிலோ அர்த்தமுமில்லை; பயனுமில்லை.

4. இன்னும் கொஞ்ச நேரம் தம் பிடித்துப் பாட முடியும் என்ற நிலை வரும்பொழுதே, பாடுபவர் தனது ஆடும் பகுதியை நோக்கித் திரும்பி வந்திட முயல வேண்டும். அப்படி வந்தால் எதிர்க்குழு பாய்ந்தடிக்க (Pursuit) முயலும்பொழுது, தப்பித்து வர முடியும். கடைசி மூச்சு வரை கத்திவிட்டு, களைத்துப்போய் திரும்புவது புத்திசாலித்தனமான ஆட்டமல்ல.

5. எதிர்பாராத விதமாக எதிராட்டக்காரர்களிடம் பிடிபட்டுவிட்டால், ‘இனி தப்பிக்க வழியில்லை’ என்று உணரும் நேரத்திலேயே பாடுவதை நிறுத்திவிட வேண்டும்.

தொடர்ந்து பாடிக்கொண்டே மேலும் விடுபட முயற்சித்தால், மேலும் பலர் மேலே விழுந்து அழுத்தவும், மடக்கவும், அழுத்தவும் கூடும்.