பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 28 சு சமுத்திரம் மனிதர்கள் குவிந்தார்கள். மோகினியின் தந்தை ஏகாம்பர மும் ஒவ்வொருவரிடமும் எங்கே நீங்க வராம போயிடுவீங் களோன்னு பேபி பயந்துட்டுது. என்னைக் கூட ஒங்ககிட்ட இருந்து கையோட கூட்டிக்கிட்டு வரச் சொல்லிச்சு நல்ல வேள வந்திட்டீங்க... இல்லன்னா, பப்ளிஸிட்டி மானேஜர், ஜெனரல் மானேஜர், இன்ஸ்பெக்டர், வக்கீல் ஸார் (இதில் மூன்றுபேர்களை நான்கு முறை அழித்துக்கொண்டார்) போய் கூட்டிக்கிட்டு வராம போயிட்டிங்களேன்னு என்மேல பாய்ஞ்சியிருப்பா! நல்லவேள வந்திட்டிங்க' என்று சீவல் பாக்கைக் கொறித்துக்கொண்டு, வெற்றிலையை வாய்க்குள் வைத்துக்கொண்டு ரகசியமாகக் குதப்பினார். இதனால் ஒவ். வொருவரும் தான்தான் சீப் கெஸ்ட்" என்று நினைத்துக் கொண்டும், இதர மூவரை சீப்பாக” அனுமானித்துக் கொண்டும் ஏகாம்பரத்தின் ரகசியத்தை மனத்திற். குள்ளேயே ரசித்துக்கொண்டு புன்னகை சிந்தினார்கள். வெளியே இவர்களுக்காகக் காத்துக்கிடந்த டிரைவர்கள், எப்படிப் பச்சையாகப் பேசிக் கொண்டார்கள் என்பதை சென்ஸார் செய்துகூட எழுத முடியாது. பப்ளிஸிட்டி எக்ஸிக்யூடிவ்வான லீலாவும் மூன்று மாத விடுமுறைக்குப் பிறகு வேலையில் சேர்ந்தாள். திருநெல்வேலி யில் ஏதோ ஒரு குக்கிராமத்தில் பெற்றோருடன் மூன்றுமாத காலத்தைக் கழித்துக் கொண்டிருந்தபோது, அஸிஸ்டெண்ட் பப்ளிவிட்டி மானேஜர் சங்கரை நினைத்துக்கொண்டே, அவனை எப்போது பார்க்கலாம் என்று துடித்துக் கொண் டிருந்தவள் அவள். இப்போது மானேஜரிடம் திட்டுக்கள் வாங்கிக் கொண்டிருக்கும் சங்கர், லீலாவின் செல்லமான காதல் திட்டுக்களையும் சீரியஸாக எடுத்துக்கொண்டு, மானேஜரை எப்படி எப்படியெல்வாம் கேட்கலாம் என்று மனதுக்குள் அடக்கி வைத்திருந்தானோ, அவற்றைக் காதலி மது அம்புகளாக்கினான். போதாக்குறைக்கு அவனுக்கு அருகில் இருந்த நாற்காவியில் மோகினி டெம்பரரி கேஷவல்" பெண்-உட்கார்ந்திருந்தாள். அது லீலாவுடைய