பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 சு. சமுத்திரம் ஆனால், அவர் நல்ல பையன் என்று கருதுகிற அலிஸ்டண்ட் பப்ளிவிட்டி மானேஜர் ரகுமணிக்கு, மெமோ வுக்குமேல் மெமோவாக அவன் கொடுப்பது மட்டும் பிடிக்க வில்லை. ஒருநாள் அவள் ஒரு ஃபைலோடு வந்து, எதையோ காரணங்காட்டி, ரகுமணியை சஸ்பெண்ட்' செய்ய வேண்டும் என்றாள். முகத்தைப் பிராண்டும் ஈயைக் கூட மெதுவாகத் துரத்தும் ஆதிமூலம் ஐஸே ஐளே' என்று வாயில் மட்டும் அடித்துக்கொண்டால் பரவாயில்லை. அந்த ஃபைலை எடுத்து கீழேயும் எறிந்துவிட்டு, தன் தலையிலும் அடித்துக்கொண்டார். அவ்வளவு தான். ஆதிமூலத்திற்குப் பைத்தியம் என்றும், அதனால்தான் தலையில் அடிக்கடி அடித்துக்கொள்கிறார் என்றும் மோகினி தன் வேவுப்படை மூலம் ஒரு செய்தியைப் பரப்பிவிட்டாள். நண்பர்கள் அவரை டிரான்குலைசர்’ சாப்பிடுங்கோ என்றார்கள். ஒருவர் சைக்கியாட்ரிஸ்ட் ஒருவரை அவர் வீட்டுக்கே கூட்டிவந்தார். இப்போது ஆதிமூலம் தான் பைத்தியமில்லை என்பதை எப்படி நிரூபிக்கலாம் என்பதற். காகச் சிந்தித்துச் சிந்தித்து, பைத்தியம் பிடிக்கும் நிலை யிலேயே இருக்கிறார். இப்படி எத்தனை வெற்றிகள் மோகினிக்கு: ஆனால் அவளால் முழுமையாகத் திருப்திப்பட்டுக் கொள்ள முடியவில்லை. மகள், இந்த பதினெட்டு வயதில், வயதுக்கேற்ற வளர்ச்சியுடனும் வளர்ச்சிக்கேற்ற பருவ மினுமினுப்புடனும், திரட்சியுடனும், அழகு மொத்தமாக உருவெடுத்ததுபோல் இருப்பதில் அவளுக்குப் பெருமை தான். ஆனால், அவள் அம்மாவை மதிப்பதாகத் தெரிய வில்லை. விவரம் தெரியும் வயதுவரை, மம்மி மம்மி" என்று பூனைக்குட்டிமாதிரி தன்னையே சுற்றி வந்தவள். விவரம் தெரியத் துவங்கிய வயதிலிருந்து விலகிப்போனதை நினைக்கையில், பெற்ற மனம் வெறுமையான பிரசவ வேதனையால் துடித்தது .