பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 21 கிறேன். நீயும் என் மகனும் ஆயுள் முழுதும் ஒரே வீட்ல ஒரு தாய் பிள்ளை மாதிரி வாழனும் என்பதுதான் என் ஆசை. சொல்லு தம்பி... இந்தக் குடும்பமும் என் பிள்ளை களும் வாழ்நாள் வரைக்கும் ஒண்ணா இருப்பதுக்கு என் பொறுப்புன்னு ஒரு வார்த்தை சொல்லு தம்பி..." சுவர் கடிகாரத்தையும், வீடியோ கேஸட் செட்டையும், வால் பேப்பரையும் பிளாஸ்டிக் தரையையும் ஏகாந்தாய் பார்த்துக்கொண்டிருந்த செல்வம், அவரையே உற்று நோக் கினான். பிறகு அமைதியாகச் சொன்னான். தனிப்பட்ட முறையில் என் கருத்தைக் கேட்டிங்கன்னா, இந்த சொத்து விவகாரத்தை அண்ணன் தங்கை முடிவுக்கே விட்டிருக்கணும். ஆனாலும் இது உங்க பெர்ஸனல் விவ காரம். எனக்கு சம்பந்தமில்லை; அதே சமயம் என் அம்மா ஸ்தானத்துல ஒங்களை வச்சு உறுதியாய் சொல்றேன். உலகத்தில் இன்பத்திலேயே பெரிய இன்பம் எல்லாரும் ஒன்றாய் கூடி, ஒன்றாய் சாப்பிட்டு, ஒன்றாய் இருக்கிறது தான். தனிப்பட்ட முறையில், நட்சத்திர ஹோட்டல் களுக்குப் போய் சாப்பிடுறதைவிட, கூழானாலும் அதை வீட்டில் ஒன்றாய் சாப்பிடுறதுல இருக்கிற திருப்தி எதுலயும் கிடையாதுங்க அய்யா. நான் சின்ன வயசுல கிராமத்தில இருக்கும்போது எங்க பங்காளிப் பையன்களை ஒன்றாய் சேர்த்து, குருகுலம் மாதிரி குடிசை போட்டு இருந்தவன். தோட்டத்துக்குக் காவலுக்குப் போகும்போது, சரல் மேட்ல எல்லாப் பையன்களும் ஒண்ணா படுப்போம், வீட்ல இருந்து கொண்டுபோற சாப்பாட்டை, ஒன்றாய் கலந்து சாப்பிடு வோம். அந்த ஆனந்தத்தை நினைக்கும்போது இப்போ கூட என் உடம்பெல்லாம் புல்லரிக்கிறது. இதை எதுக்கு சொல்றேன்னா ஒங்க சொத்து விவகாரத்துல நான் சம்பந்தப் படப் போறதில்ல! பானுவை என் சொத்தாகவும்; பாஸ்கரனை என் மைத்துனராகவும், இவங்களை என் சகோதரியாவும் நினைக்கிற உரிமை மட்டும் கிடைத்தால் எனக்குப் போதும்.'