பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 தணிகாசலம், படுத்த படுக்கையாகிவிட்டார். ஏற் கனவே உடல்நலம் குன்றிப்போன அவரிடம் பாஸ்கர் வந்து, பானு நம்ம தலையில் கல்லைப் போட்டுட்டா அப்பா! செல்வத்தை ரிஜிஸ்டர் மேரேஜ் செய்துக்கிட்டாளாம்! நீங்க வரச்சொன்னால் வருவாளாம்... என்ன சொல்றது" என்று சொன்னபோது அவர் மெளனியானார். கூந்தலை வலது தோள் வழியாகத் தொங்கப் போட்டபடி ஜடை பின்னிக் கொண்டே வந்த மைதிலி, அவள் பெயருக்கும் சரிசம மாய் சொத்து எழுதிவச்ச திமிர்ல. அவள் செய்திட்டாள். நம்ம ஜாதில இல்லாத வழக்கமாய் உயில் எழுதுனதால தான் அவள் இப்படி வேற ஜாதில, நம்ம சொல்லையும் மீறி செய்துகிட்டாள்' என்றாள். தணிகாசலம், பதிலளிக்கவில்லை. பேசிய மருமகளை யும், பேசப்போன மகனையும், ஏறெடுததுப் பார்க்கவில்லை. கூனிக் குறுகியவராய், குப்புறப் படுத்தார். தனக்குள்ளேயே பேசிக்கொண்டார். என்ன தான் மனம் பல கோணங்களில், மகளின் செய் கையை நியாயப்படுத் திப் பார்த்தாலும் வாழையடி வாழை யாய், ஆயிரமாயிரம் ஆண்டாய் சப்த நாடிகளில் ஊடுறுவிய ஜாதிய உணர்வை, அவரால் உதற முடியவில்லை. வேற ஜாதிக்காரனை, மாப்பிள்ளையாக நினைக்கும்போதெல் லாம், அவருக்கு பிரஷ்ஷர் ஏறியது. ஒரு வாரம் விடாப்பிடியாய் ஓடியது.