பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை ஜி. லட்சுமிநாராயணன் M. A., B.L., (தேசிய முழக்கம்-கரிகாலன்) 'சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்...' என்ற தலைப்புடன் அச்சிடப்பட்ட தாள்களை அடியேனின் கைகள் பெற்றபோது அதிர்ச்சி அடைந்தேன்-உடலெங்கும் புதுமை வெள்ளம் பரவிப் பாய்ந்தால் பெறும் ஒரு இன்ப அதிர்ச்சி. நெடுநாளைய நண்பர் திரு. தர்மலிங்கம், நீண்டதொரு இடைவெளிக்குப் பிறகு பல இடங்களில் தோண்டித் துருவி என்னைத் தேடிக் கண்டுபிடித்து என் கைகளில் அச்சுத்தாள் களைத் திணித்தபோது நான அடைந்த இன்பம் இவ்வுலகை நான் கையில் பெற்றது போலிருந்தது. இனிய முகத்துடன் என் எதிரில் இருந்த நண்பர் எனக்கு இமயமெனத் தோன்றினார். அலுவலகச் சிக்கல்கள், அன்றாடத் தொழிற் பிரச்னைகள் இவற்றிலே சிக்குண்டு இதயத்தை எங்கோ மறந்து, உணர்வு களை ஆழப் புதைத்துவிட்டு, சமுதாயத்திலே இன்று இயந்திர மாய் இரு கைகளும் பிணைக்கப்பட்ட சந்தர்ப்ப சூழ்நிலைக் கைதியாய் இருந்த எனக்கு அவர் விடுதலை அளித்தார். கூற்றுகளை வடித்துக் குவலயத்திற்குத் தர வேண்டிய நீங்கள் குறிப்பாணைகளை எழுதிக் கூலிக்கு உழைப்பதோ என்று கண்களாலே கேட்டு கூண்டுக் கதவுகளைத் திறந்து விட்டார்.