பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 57 "என்ன மாப்பிள்ளை 1 சொத்துபத்துக்கு ஆசைப்படாத மாதிரி பேசுனிங்க!' உட்காரப்போன செல்வம், துணுக்குற்று, ஆப்படியே நின்றான். பானு, கோபத்தை அடக்கியபடியே குறுக் கிட்டாள். அவரு இப்பவும் ஆசைப்படல. நான்தான் வற்புறுத் தி அவரை சம்மதிக்க வைச்சிட்டிருக்கேன். நீ எதுவும் பேசனு முன்னால் என்கிட்டே பேசு!" இப்போ மூணாவது ஆளுக்கு என்ன அவசரம்? பேக்டரி நல்லாத்தானே நடக்குது.' பேக்டரி நடக்கிந லட்சணத்தை சுந்தரம் சார் நேற்றே என்கிட்டே சொல்லிட்டார்." என்ன சுந்தரம், இது ஒங்க வேலைதானா...'

  • சட்டப்படி அம்யாதானே, பேக்டரிக்கு ஒனர். பேக்டரி இதே நிலைமையில் ஒடி, அதை மூடவேண்டிய நிலைமை ஏற்பட்டால், என்மேல. கையாடல் குற்றம் வரப் படாது பாருங்கோ...யார் யாரெல்லமோ எடுக்கிற பணத் துக்கு, நான் பொறுப்பாகக்கூடாது பாருங்கோ...”

"ஓஹோ! நான் ஒரு அவசரத்துக்குப் பணம் எடுத்ததை சொல்லிக் காட்டுறீங்களா...' முறைத்துப் பார்த்த பாஸ்கரனை, சுந்தரம் பதிலுக்கு முறைத்துவிட்டு, பானுவைப் பார்த்தார். அவள் சமாதான மாகப் பேசினாள். இப்போ, இவர் பேக்டரி நிர்வாகத்தை எடுத்துக்கிற தால குடியா மு. மு. கி டு ம்? இதுக்குப்போய் எதுக்குக் கத்துறே.' எப்படியோ போ... ஒன் பேக்டரி, ஒன் இஷ்டம். விடும் ஒன் பெயருக்குதான் இருக்குது. வேணுமுன்னால் சொல்லு காலி பண்ணிடுறோம்!"