பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 65 வர்ணனை கொடுப்பவள்போல் கொடுத்தாள். செல்வமும் நேரத்தையும் பார்க்காமல், அவள் மனம் திறந்து பேசுவதில் மனம் நெகிழ்ந்துபோனான். அவள் பேசி முடித்துவிட்டு, பெருமூச்சு விட்டபோது பாஸ்கரன் வந்தான். செல்வம் புறப்படப் போனபோது, அவன் குறுக்கிட்டான்.

  • உட்காருங்க மாப்பிள்ள! என்ன அவசரம். அத்தான் பேச்சை நீங்க சீரியஸாக எடுத்துக்கப்படாது. இவளை நான் என்ன பேச்செல்லாம் பேசியிருக்கேன் தெரியுமா? அது என்னமோ தெரியல, சின்ன வயசுலேயே நான் தனிக்காட்டு ராஜாவா வளர்ந்துட்டேன். இப்போதாவது பரவாயில்லை. அப்போ நான் பொல்லாத முரடு. ஒரு நிகழ்ச்சி சொல்றேன் கேளுங்க. ஒருநாள் நான் ஸ்கூலுக்கு போய்கிட்டு இருந்த போது ரெளடி மாதிரி ஒருத்தன் வந்தான். வந்து..."

பாஸ்கரன், ரெளடி கதைகளையும், கேடி கதைகளையும், பெண்கள் கதைகளையும், சுவை சுவையாய் சொல்லிக் கொண்டே போனான். அவன் கதைகளை முடித்தபோது, சுவர் கடிகாரம் பத்தை முடித்தது. அப்போதுதான். அவனுக்கு பானு தூங்காமல் காத்திருப்பாள் என்று நினை வுக்கு வந்தது. முன்பும் மைதிலியிடமிருந்தோ மச்சானிட மிருந்தோ புறப்படுவதற்கு கால் மணி நேரம் கடந்துவிட் டால், மாடிப்படியில் அவனுக்குத் தெரியாமலே கண் களுக்குத் தெரியாமல் வவ் வவ்வே...' காட்டுவாள். சீக்கிரம் வரும்படி கையை ஆட்டுவாள். முகத்தை கோணு வாள், விழியை உருட்டுவாள். இப்போ கண்களைப் புரட்டி னாளோ... வாயைக் கோணலாக்கினாளோ... காலால் தரையை உதைத்தாளோ... பாஸ்கரன் குதிபோட்டுப் படியேறினான். கதவு திறந்து தான் கிடந்தது. உள்ளே போய் பானு, பானு' என்றான். அவள் மல்லாந்து படுத்துக் கிடந்தாள்.

  • ・ー5