பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72 சு. சமுத்திரம் சத்தியத்துக்குக் இன்ஸ்பெக்டர் சார்! நீங்க ஆக்ஷன் எடுக்காட்டால் நாங்க பார்க்க வேண்டியவங்களைப் பார்க்கவேண்டி வரும். அப்புறம் பாஸ்கரும் நீங்களும் கூட்டாய் வருத்தப்பட வேண்டி வரும்!” திம்மையா, அதட்டினார். யோவ் பேமானி ராஸ்கல் ஸ்கவுன்டரல் 1 இடியட்' என்னையா மிரட்டுறே ஒன்னையும்-ஒன் அப்பனையும் பார்த்தவன் நான்! மரியாதையாய் இவனைக் கூட்டிட்டுப் போறியா-இல்ல இரண்டுபேரையும் உள்ளே தள்ளனுமா! திருட்டு ராஸ்கல்! போலீஸ்ன்னு நினைச்சியா-ஒன் மச்சான்னு நினைச்சியா?" சுந்தரம், செல்வத்தை நோக்கினார். "நடங்க தம்பி! இவர் மட்டுந்தான் போலீஸ் டிபார்ட் மென்டுன்னு இல்ல. இந்த டிபார்ட்மென்ட்லயும் நல்லவங்க இருக்காங்க. நடங்க தம்பி!' செல்வம் நடக்கவில்லை. சுந்தரத்தினால் நகர்த்தப் பட்டான். அவரால் அவனைத் தள்ள முடியவில்லை: மூச்சு இரைத்தது. மூச்சிளைக்கப் பேசினார். சகவலப்படாதிங்க தம்பி! என் வீட்லயே நீங்க இருக்க லாம். இங்கேயே இருங்க. நான் ஒரு டாக்சி பிடிச்சுட்டு வாரேன்-எங்கேயும் போயிடாதிங்க." சுந்தரம் போய்விட்டார். இப்போது செல்வம் தன்பாட்டுக்கு நடந்தான். பானு பானு' என்று வாய் சளைக்காமல் பேசிக் கொண்டு எங்கெங்கெல்லாமோ நடந்தான். இறுதியில் பானு புதைக்கப்பட்ட இடுகாட்டுக்கு அவன் வந்தபோது