பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 73 நான்கைந்து போலீஸ்காரர்கள், அவனைச் சூழ்ந்தார் கள். ஒன்பேரு செல்வந்தானே! நடடா ஸ்டேஷனுக்கு. அயோக்கிய ராஸ்கல் கட்டுன பெண்டாட்டியைக் கொன் லுட்டு பாசாங்கா செய்யுற, அயோக்கியப் பயலே!" செல்வம் எதுவுமே பேசவில்லை. அவர்களுக்கு நடுவில் போய் நின்றுகொண்டான். 13 இரவு முழுதும் லாக்கப் கம்பிகளைப் பிடித்தபடியே, நின்ற கோலத்திலேயே நின்ற செல்வத்திடம், மறுநாள் காலையில் திம்மையா வந்து, கண்ணில் விரல் விட்டு ஆட்டு வதுபோல், கம்பிகளுக்கு இடையே கைவிட்டு ஆட்டியபடி, ஒரு பத்திரிகையை அவன் முன்னால் காட்டி "பாருடா ஒன் பவுசு!" என்றார். பிறகு உள்ளே அதை வீசியெறிந்தார். செல்வம் பார்க்கவில்லை. இன்னொரு லாக்கப் வாசி அதை எடுத்து சத்தம் போட்டுப் படித்தார். இளம் மனைவிக்கு விஷம் கொடுத்துக் கொன்ற கணவன் கைது! சடலத்தைப் போலீசார் கைப்பற்றினார்கள்! அந்த லாக்கப்வாசி, அந்தத் தலைப்புச் செய்தியை படித்துவிட்டு, பிறகு பாடி செய்தியையும் முடித்துவிட்டு, செல்வத்தை திகைப்போடு பார்த்தார்; வெறுப்போடு பார்த்தார். ஆனால் செல்வமோ தன்னை மறந்து, தன்னிலை இழந்து பானு...பானு' என்ற மனம் கூவிய வார்த்தைகளை, காதுக்குள் வாங்கிக்கொண்டே ஸ்தம்பித்து