பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டுப்பட்டால் 75 முத்தம்மா கேவினாள். மீண்டும் தொடர்ந்தாள்:

  • கவலப்படாதிங்க சாமி! ஒ ங் க ளு க் கே இந்த நிலைன்னா... ஒங்களை இப்படி ஆக்குனவங்களுக்கு என்ன கதியோ? நாங்க இதை விடப்போவதில்லை. இந்த சத்தியத்தை ஜெயிக்க முடியாது! சத்தியத்துக்குக் கட்டுப் படுறவங்களுக்கு, சத்தியமும் கட்டுப்பட்டே ஆகணும்.'

மு. த் த ம் மா- முற்றுப்பெறாத போராட்டத்துக்கு முன்னுரை கூறிவிட்டு செல்வத்தையே பார்த்தாள். அவன் அவளை ஒருகணம் ஆச்சரியமாகப் பார்த்துவிட்டு, மறு. கணம் தலையைத் தொங்கப் போட்டான். பானுவின் ஆயுள் முடிந்த பிறகு, தன்து ஆயுளே ஒரு தண்டனையானதால், இனிமேல் தூக்குத் தண்டனை கிடைத்தாலும் அது பெரிதல்ல என்பதுபோல், அவன் கண்கள் உள்நோக்கிப் பார்த்தன-தங்களைத் தாங்களே பார்ப்பதுபோல் தோன்றின. சுந்தரத்தாலும் அவனைப் புரியமுடியவில்லை. அதேசமயம் அவனுள் இருந்த சத்தியம் புரிந்தது. சுந்தரமும், முத்தம்மாவும் ஆவேசமாக வெளியேறி னார்கள். ஆகவேண்டிய ஆட்களைப் பார்ப்பதற்காக, அணி வகுத்து நடப்பதுபோல் நடந்தார்கள் நடையே மூச்சாக, மூச்சே நடையாக முற்போக்காய் நடந்தார்கள். செல்வத்தின் காதில், முத்தம்மா பேசியது, பானு, பேசுவதுபோல் இப்போது ஒலித்தது. ஒலி ஒலியாய், வளையல் தாள லயத்தோடு, நம்பிக்கை முதலில் கேட்டது. சத்தியத்துக்கு, கட்டுப்படுறவங்களுக்கு சத்தியமும் கட்டுப்பட்டே ஆகணும்", 类