பக்கம்:சத்தியத்துக்குக் கட்டுப்பட்டால்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86 சு. சமுத்திரம் சொன்னது மாதிரி உங்க குடும்பத்தைப் பத்தி எல்லா விவரமும் சொல்லுங்க. அவங்கள எனக்குச் சாதகமா மாத்திக் காட்டுறேனா இல்லையான்னு பாருங்க. ஆனால் ஒண்ணு, ஒங்க அப்பாகிட்ட போய் அப்பா, அப்பா, எனக்குப் பிடிச்ச பெண்ணை ஒரு தடவை ஒரே ஒரு தடவ. பாருங்க. அதுக்கப்புறமும் ஒங்களுக்குப் பிடிக்கலன்னா எனக்கு வேண்டாமுன்னு ஒரு வார்த்த போட்டுவையுங்க." டிரை பண்றேன்!" அதப்பத்தி எனக்குத் தெரியாது. வார வெள்ளிக் கிழமை நான் ஒங்க வீட்டுக்கு வரேன்! சீனிவாசன் அவள் அருகில் நெருங்கிக்கொண்டான். யாரும் இல்லாத அந்த இடத்தில், வீட்டு விவரங்களை, ரகசியமாகச் சொன்னான். மோகிலளியிடம் புதிய உறுதி பிறந்தது. அவளை விரும்பாத ஒருவர் இருக்க முடியுமா? பார்த்துடலாம். பாத்துட வேண்டியதுதான். மோகினி, கால்களில் கைகளை ஊன்றிக்கொண்டே எழுந் தாள். சீனிவாசன், சற்றுத் துணிச்சலோடு அவள் கைகளைப் பற்றிக்கொண்டு எழுந்தான். பின்னர் அப்போதே கல்யாணமாகி விட்டதுபோன்ற உரிமையில், இனிமே சுந்தரம் வீட்டுக்குப் போகாதே’ என்றான். "அந்த மாமி நல்லவர். சுந்தரத்தின் பையன் ஒருவன்... நாலு வயசு இருக்கும். அவன் ஆன்ட்டின்னு கூப்பிடும்போது எனக்கு இந்த உலகமே தூசி மாதிரி தெரியும். நான் அந்த வார்த்தய கேக்கத்தான் போறேன்! அந்த ஆளு என்ன டான்னா என் ஆன்ட்டி நிலமையை எக்ஸ்பிளாயிட் பண்ணப் பாக்குறான்!” எதுக்கும் நீ..." நீங்க எனக்கு ஒண்ணும் சொல்லாண்டாம். நீங்க மட்டும் என் கழுத்துல ஒரு மஞ்சள் கயிற்ற போட்டுடுங்க. அப்புறம் பாருங்க அந்த சுந்தரம் என்ன பாடுபடப் போறான்னு!’