பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குனியாத குன்றம்





எரியுந்தீ குனிவதில்லை;

இமயமலை குனிவதில்லை;
எவர்முன் னாலும்

மரியாதைக் காகவுந்தன்

தலைகுனிதல் பாவேந்தன்
வழக்க மில்லை.

விரிநிலவுக் கல்லாமல்

வேறெதற்கும் கடலெழுந்து
நின்ற தில்லை;

பெரியாருக் கல்லாமல்

பிறர் முன்னால் இவனெழுந்து
நின்ற தில்லை.