பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

முருகுசுந்தரம்



நாலும் இரண்டும் பாரதி தாசனின்
நறுக்குத் தெரித்த கவிதையுடன்-சுவைச்
சேலத்து மாம்பழம் கூடப் பிடிக்கும்
சென்னை நகர் பிடிக்கும்.


ஆணொன் றிவரை உயர்திணை யாலே
அழைப்பது சட்டமென் றாலும்-கட்சித்
தூணென் றிவரை அஃறிணை யாலே
சொல்வதில் குற்ற மில்லை.


நாளும் தடவிப் பாடிய வீணைகள்
நாகங்கள் ஆவ துண்டு-இவர்
தாளம் தவறாத தமிழிசைப் பாடல்
தளை தட் டாத வெண்பா.