பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

35




ஆளவந்தார் ஆணைகளுக் கஞ்சி, இந்தி
அரக்கியினைக் கைப்பிடிக்கச் செல்வோர் எல்லாம்
தாளமுத்து நடராசன் பிணத்தை நாளை,
தாண்டித்தான் சென்றாக வேண்டும். இந்தக்
கோளரிகள் தியாகத்தின் மீதே, ஆட்சிக்
கோட்டையினை நாமெழுப்ப வேண்டும்; நாட்டில்
நாளையிந்த வீரர் க்குச் சிலையெ டுத்தால்
நடுவினிலே பெரியாரின் சிலைஇ ருக்கும்.