பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாட்டுக்கு வீரத்துறை




பக்தித் துறையன்று
முக்தித் துறையன்று
பாட்டுக்கு வீரத்துறை-தமிழ்
நாட்டுக்குக் காவல்துறை-நல்ல
முத்தமிழ்க் குத்துறை
கண்டஅண் ணாத்துரை
தித்திக்கும் காஞ்சித்துரை-தமிழ்
முத்துக்கு வரிக்குந்துறை.


அரும்புடைக் குந்தேனைக்
கரும்புடைக் குஞ்சாற்றை
அழகுத் தமிழாகத் தீட்டுவார்-அதைக்
கழகத் தமிழர்க்குக் காட்டுவார்-நாளும்
விரும்பி வருமன்பர்
நெருங்கிவந் தால்தமிழ்க்
கரும்பொடிக்கும் கையை நீட்டுவர்-பின்னர்க்
கரும் பொடிக்கும் கையை நீட்டுவார்.