பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

37




குருத்து விடுமறிவை
அறுத்து விடுமடமைக்
கருத்து அடைக்கும் திட்டம் தீட்டுவார்-பின்னர்க்
கருத்தடைக்கும் திட்டம் தீட்டுவார்-என்றும்
பொறுத்திருக் குந்தம்பி
மறுத்துரைக் காவண்ணம்
சிறுத்தையெழத் தமிழைப் பேசுவார்-முத்துக்
கருத்துக்களை அள்ளி வீசுவார்.


மெச்சு புகழ்மிக்க
கச்சி நகர் தந்த
மேதை இருக்கும் வரை-அவர்
பாதை இருக்கும்வரை-கலை
உச்சியிலே வைத்து
மெச்சப் படுகின்ற
கச்சி குலைவதில்லை-நம்
கட்சி குலைவதில்லை.