பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சந்தனப் பேழை

39




கங்குல் இருள் மெதுவாய்க்
கட்டுக் குலைந்ததடி
எங்கும் செங்கதிர்கள்
இருளைக் கிழிக்குதடி
கங்குல் இருட்டுக்
கதவுடைத்து முன்வந்த
எங்கள் விடிவெள்ளி
எங்கோ மறைந்ததடி

(தேடி)


சதிராடும் முல்லைச்
சரங்கள் குலுங்குதடி
புதிய கமலம்
புறவிதழை அவிழ்க்குதடி
மதுமலர்கள் எல்லாம்
மனம்வருந்தக் காஞ்சிநகர்ப்
புதுமணத் தென்றல்
போயெங்கோ மறைந்ததடி

(தேடி)