பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பேசாத நிலவு



வங்கக் கடலே அழாதே-காஞ்சித்
தங்கத் தமிழ்த்தேரைத் தட்டி எழுப்பாதே

வங்கக்...


சட்ட சபைஅலுப்போ ? சந்தனச் சிந்தனைகள்
கொட்டிக் காஞ்சியிலே குவித்த பெருங்களைப்போ?
எட்டி நடந்துபடி ஏறிவந்த இளைப்போ?
என்ன காரணமோ? அண்ணன் உறங்குகிறான்.

வங்கக்...


பாராளு மன்றத்தைப் பற்றிய சிந்தனையோ?
பட்ட மளிப்புவிழா பற்றிய கற்பனையோ?
ஒரங்க நாடகத்தின் உள்ளத்து ஒத்திகையோ?
ஒன்றும் புரியவில்லை; ஓவென்று கூச்சலிட்டு.

வங்கக்...


பேசாத தென்றலேப்போல் ஒசையில் லாமலன்பை
வீசும் எமதண்ணன் வேதனை புரியவில்லை.
பாசக் குளிர்நிலவைப் பரப்பும் முழுமதிக்குப்
பேச்சென்ன வெனச்சொல்லிப் பேசா திருக்கினறான்.

வங்கக்...