இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
அண்ணாவின் வீணை
ஆரூர்ச் சோலைக் குயில் கூவுது-எங்கள்
(ஆரூர்)
செந்தமிழ்ப் புலவர்க்குக் கைநீட்டுது-கற்புச்
செல்விக்குக் கடலோரம் சிலைநாட்டுது
வந்தவர் மகிழ்வூற முகங்காட்டுது-எங்கள்
(ஆரூர்)
பிச்சைக் காரர்க்கு நிதிதேடுது-தான்
பிறந்த மண்ணுக்குப் புகழ்தேடுது
உச்ச வரம்பை உளம் நாடுது-எங்கள்
(ஆரூர்)
மத்திய அரசாங்கம் செவிசாய்க்கவே-இது
மாநில சுயாட்சிப் பண்பாடுது
கத்தி முறையாலே சாதிப்பதை வெறும்
(ஆரூர்)
மாளிகை அரசாங்க முறைமாற்றுது-பொது
மக்கள் அரசாங்க நிலைபோற்றுது
வாழ முடியாத வறியோர்க் கெல்லாம்-புது
வசந்தம் வரவேண்டி இதுகூவுது
(ஆரூர்)