பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

முருகுசுந்தரம்



சிட்டுப்போல் காதலர்க்கும், காஞ்சி தந்த
சிற்பிக்கும் பொருத்தமுண்டு; காத லர்கள்
கட்டுரைகள் தந்தபடி அணைத்துக் கொண்டு
கண்துஞ்சா திருப்பார்கள்; இவரும் கூடக்
கட்டுரைகள் நள்ளிரவில் தருவார்; பின்னர்க்
காவியத்தைச் சென்றணைப்பார்; இவர் எழுத்துப்
பட்டறையே இரவில்தான்; சாமக் கோழி
பதைத்தெழுந்தால் இவர்மூளை விழித்துக் கொள்ளும்


வரலாற்றை உருவாக்கும் எழுத்தா ளர்கள்
வையத்தில் ஒருசிலரே! அறிஞர் அண்ணா
வரலாற்றை எழுப்பியவர்; தமக்குப் பின்னால்
வளமான எழுத்துப்பட் டாளந் தந்த
திறமிக்க எழுத்தாளர்; இவர் எழுத்தில்
தீட்டித்தான் சிந்தனைக்குக் கூர்மை ஏற்றி
அருநூல்கள் தருகின்றோம்; கவிதை யாற்றை
அரங்கத்தில் விடுகின்றோம்; வாழ்க அண்ணா!


அண்ணா கவியரங்கம்-சேலம். 4-6-68