இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
52
முருகுசுந்தரம்
ஆம்பல் புறவிதழை அவிழ்க்கின்ற நெய்தல்நிலப்
பூம்புகார்க் கோவலனை நீயறிவாய்; இவன்கூடப்
'பூம்புகார்' தந்த பொல்லாத காதலன்தான்;
‘பூம்புகார்க் காதலனே! பொறுமையைச் சோதித்தால்
நாம்புகார் செய்வோம் நாலுபேர் முன்னாலே,
கண்ணகியைப் போலக் கண்ணீர்க் குளமாகி
இந்நாள் தலைவி இராள்,'என் றெடுத்துரைப்பாய்!
கலைஞர் கவியரங்கம் - சேலம்.