பக்கம்:சந்தனப் பேழை (கவிதை).pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கரைந்ததுவா காற்றினிலே

காஞ்சிக் கீதம்




பூக்காடு பொசுங்கியதா!
புகழ்விரித்து நடனமிட்ட
புள்ளித் தோகை
தீக்காட்டில் சிக்கியதா!
தேரச்சு முறிந்ததுவா!
தமிழர் மானம்
காக்கத் துடித்தெழுந்த
கையிற்று விழுந்ததுவா!
கருணை யற்ற
சாக்காடே! உனையின்று
சாகடிக்கத் தமிழ்மறவர்
தேடு கின்றார்.